புதன், 5 பிப்ரவரி, 2025 அன்று 3:07:02 PM
டெல்லியில் கடந்த 26 வருடங்களாக ஆட்சியில் இல்லாத பாஜக, இம்முறை ஆட்சியைப் பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
புதன், 5 பிப்ரவரி, 2025 அன்று 1:15:57 PM
கடந்த வாரம், இந்தியா இருசக்கர வாகனங்கள் மீதான இறக்குமதி வரியை குறைத்தது. 1,600 சிசிக்கும் அதிகமான இன்ஜின் கொண்ட இருசக்கர வாகனங்களுக்கு 50 சதவீதத்திலிருந்து 30 சதவீதம் ஆக வரி குறைக்கப்பட்டது.
புதன், 5 பிப்ரவரி, 2025 அன்று 3:20:37 PM
இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஹிஸ்ப்-உத்-தஹ்ரீர் (Hizb-ut-Tahrir) அமைப்பைப் சேர்ந்த இரண்டு பேரை திங்கள் கிழமையன்று (பிப்ரவரி 3) அன்று தேசிய புலனாய்வு முகமை (NIA) கைது செய்துள்ளது.
புதன், 5 பிப்ரவரி, 2025 அன்று 3:20:37 PM
இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஹிஸ்ப்-உத்-தஹ்ரீர் (Hizb-ut-Tahrir) அமைப்பைப் சேர்ந்த இரண்டு பேரை திங்கள் கிழமையன்று (பிப்ரவரி 3) அன்று தேசிய புலனாய்வு முகமை (NIA) கைது செய்துள்ளது.
புதன், 5 பிப்ரவரி, 2025 அன்று 4:37:13 PM
தமிழகத்தில் நகரங்கள் கான்கிரீட் காடுகளாக மாறுவதைத் தடுப்பதற்கு, பொது ஒதுக்கீட்டு இடங்களை அரசே விற்கும் விதிமுறையை மாற்ற வேண்டுமென்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநலமனுவின்படி, தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
புதன், 5 பிப்ரவரி, 2025 அன்று 2:19:25 PM
அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறிய, இந்தியாவை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அந்நாட்டின் சி17 எனும் ராணுவ விமானம் மூலம் இன்று மதியம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள குரு ராம் தாஸ் ஜி சர்வதேச விமான நிலையத்தில் வந்தடைந்தனர்.
புதன், 5 பிப்ரவரி, 2025 அன்று 9:58:31 AM
இந்தியாவின் பொருளாதாரம் சீனாவை விட பின்தங்கிய நிலையில் இருப்பதாக புகழ்பெற்ற எழுத்தாளர், கட்டுரை ஆசிரியர் மற்றும் உலகளாவிய முதலீட்டாளர் ருசிர் ஷர்மா கருதுகிறார். இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்த, அனைவருக்கும் சம வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
புதன், 5 பிப்ரவரி, 2025 அன்று 5:22:26 AM
காஸா முனையை அமெரிக்கா தனது நிர்வாகத்தின் கீழ் எடுத்து, அங்கு தேவையான வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் என்று டிரம்ப் கூறினார். அவர் இப்படிக் கூறுவது ஏன்? இதை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எப்படிப் பார்க்கிறார்?
புதன், 5 பிப்ரவரி, 2025 அன்று 12:17:17 PM
ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
புதன், 5 பிப்ரவரி, 2025 அன்று 4:27:46 AM
ஒவ்வோர் ஆண்டும் ரொனால்டோ, மெஸ்ஸி பிறந்த நாளின்போது கால்பந்து ரசிகர்கள் மத்தியில், இவர்களில் யார் ‘கோட் (GOAT)’ என்ற விவாதம் சூடுபிடிக்கும். உண்மையில் கால்பந்தின் சிறந்த வீரர் ரொனால்டோதானா? தமிழ்நாடு, கேரள ரசிகர்கள் சொல்வது என்ன?
புதன், 5 பிப்ரவரி, 2025 அன்று 1:20:57 AM
அமெரிக்காவில் பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். உலகம் முழுவதும் உள்ள குடியுரிமை சட்டங்களுடன் இது எவ்வாறு ஒப்பிடப்படுகிறது? பிற நாடுகளில் என்ன நிலை உள்ளது?
புதன், 5 பிப்ரவரி, 2025 அன்று 1:12:12 AM
செர்பியாவில் போராடும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, ஒரு பூங்கொத்தை தூக்கி எறிந்து, தனது திருமணத்தை கொண்டாடியுள்ளார் ஒரு மணமகள்.
புதன், 5 பிப்ரவரி, 2025 அன்று 2:30:52 AM
கிளாம்பாக்கத்தில் பேருந்துக்காக காத்திருந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண்ணை ஆட்டோவில் கடத்தி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக, ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட 3 நபர்களை காவல்துறை தேடி வருகிறது. என்ன நடந்தது? நாளிதழ்களில் வெளியான இன்றைய முக்கியச் செய்திகளைக் காண…
செவ்வாய், 4 பிப்ரவரி, 2025 அன்று 8:08:18 AM
நடிகர் விஜய் ஆரம்பித்த தமிழக வெற்றிக் கழகம் கட்சி ஓராண்டை நிறைவு செய்துள்ளது. இக்கட்சி அரசியல் தளத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் என்ன?
செவ்வாய், 4 பிப்ரவரி, 2025 அன்று 12:12:18 PM
ராஜஸ்தானில் உள்ள கரௌலி மாவட்ட மகாபஞ்சாயத்து எடுத்த முடிவு தற்போது முக்கியச் செய்தியாக மாறியுள்ளது.
செவ்வாய், 4 பிப்ரவரி, 2025 அன்று 5:50:37 AM
மெக்சிகோ மற்றும் கனடா மீதான வரி விதிப்பை நிறுத்தி வைத்துள்ள அமெரிக்கா, சீனா மீதான வரி விதிப்பை நிறுத்தவில்லை. இது குறித்து இந்த கட்டுரை அலசுகிறது.
செவ்வாய், 4 பிப்ரவரி, 2025 அன்று 2:20:39 AM
க்யோன் பெர்ரே சிண்ட்ரோம் என்ற நோய் பாதிப்பால், சென்னையில் ஒரு சிறுவன் உயிரிழந்ததாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
வியாழன், 30 ஜனவரி, 2025 அன்று 1:58:10 AM
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றும் என்ற தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
அது மட்டுமின்றி, “பொருளாதாரப் பாதுகாப்பை” ஒரு காரணமாக வலியுறுத்தி, ஆர்க்டிக் தீவிலுள்ள கிரீன்லாந்தைப் பெறுவது குறித்த தனது தொடர்ச்சியான கோரிக்கையை அடிக்கோடிட்டுக் காட்டினார்.
மறுபுறம், டென்மார்க்கின் கீழ் உள்ள தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்து, விற்பனைக்கு இல்லை என்று அதன் அரசாங்கம் தெளிவாகக் கூறியுள்ளது. ஆனால் கிரீன்லாந்தில் அதிகளவில் கிடைக்கும் கனிமங்களும், இன்னும் பயன்படுத்தப்படாத அந்த வளங்களுக்கான தேவையும் அதிக அளவில் உள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
புதன், 5 பிப்ரவரி, 2025 அன்று 1:32:35 AM
பனாமவின் கரீபியன் கடலுக்குள் நீருக்கு அடியில் நான்கு மாதங்கள் வாழ்ந்த நபர். இந்த ஆராய்ச்சிக்கான காரணமும் பின்னணியும் என்ன?
வெள்ளி, 31 ஜனவரி, 2025 அன்று 2:19:07 AM
ஈமு கோழி வளர்த்தால் பெரும் லாபம் ஈட்டலாம் என்று விளம்பரம் செய்து, பல கோடி ரூபாய் மோசடி செய்த சுசி ஈமு பண்ணை உரிமையாளர் குருசாமிக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.19 கோடி அபராதமும் விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதில் ஏமாற்றப்பட்டவர்கள் இழந்த பணம் எப்போது கிடைக்கும்?
வியாழன், 30 ஜனவரி, 2025 அன்று 2:58:13 AM
மேட்டுப்பாளையம் ஆணவக் கொலை வழக்கில், தம்பியையும், அவரின் காதலியையும் வெட்டிக் கொன்ற அண்ணன் குற்றவாளி என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தண்டனை விவரங்களை கோவை நீதிமன்றம் இன்று தெரிவித்தது. இந்த ஆணவக்கொலை வழக்கில் வினோத்குமாருக்கு வழங்கப்பட்ட தண்டனை என்ன?
வியாழன், 30 ஜனவரி, 2025 அன்று 7:00:00 AM
உத்தர பிரதேசம் கும்பமேளாவின் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு, இந்த நிகழ்வின் முக்கியமான இடமாகப் பார்க்கப்படும் திரிவேணி சங்கமம் என்பது என்ன என்ற கேள்வி எழுகிறது. அந்த இடம் எங்கு உள்ளது? கும்பமேளாவில் அதன் முக்கியத்துவம் என்ன?
புதன், 29 ஜனவரி, 2025 அன்று 12:12:57 PM
சம்பவ இடத்தில் பல உயிரற்ற உடல்களை பார்த்ததாக, அடையாளத்தை வெளிப்படுத்திக்கொள்ள விரும்பாத ஒரு சுகாதாரப் பணியாளர் தெரிவித்தார்.
செவ்வாய், 28 ஜனவரி, 2025 அன்று 4:17:39 AM
80 ஆண்டுகளுக்கு முன்பு, சோவியத் படைகள் ஆஷ்விட்ஸ்-பிர்கெனோவில் உள்ள நாஜி மரண முகாமில் இருந்த கைதிகளை விடுவித்தன. ஹிட்லரின் யூத படுகொலை மையமாக திகழ்ந்த அவுஷ்விட்ஸ் எவ்வாறு இயங்கியது?
ஜனவரி 27ம் தேதி, அந்த மரண முகாமில்இருந்து கடைசியாக உயிர் பிழைத்தவர்கள் மற்றும் உலகத் தலைவர்கள் சிலர் அங்கு ஒன்றுகூடி, கொல்லப்பட்ட 1.1 மில்லியன் மக்களை நினைவுகூருவார்கள்.
அங்கிருந்து தப்பித்து, தற்போது உயிருடன் எஞ்சியிருக்கும் பெரும்பாலானவர்கள், அவர்களின் 90 வயதுகளில் உள்ளனர். மேலும் அவர்களில் சிலர் கலந்துகொள்ளும் கடைசி நினைவேந்தல் நிகழ்வாகக் கூட இந்த ஆண்டு அமையலாம்.
வெள்ளி, 31 மே, 2024 அன்று 9:09:18 AM
பிபிசி தமிழின் முக்கிய பிரேக்கிங் செய்திகள், ஆழமான கட்டுரைகள், சிறப்புக் கட்டுரைகளை இனி உங்கள் வாட்ஸ்ஆப்பிலேயே நீங்கள் பெறலாம்.